போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில்… முக்கியஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு!
![ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில்… முக்கியஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு!](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/24-666296bcc44ed.jpg)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பில் நேற்றையதினம் (06-06-2024) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.