உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டு கொள்வதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் (Suren Raghavan) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05.07.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதுடன் அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், அவை உதய செனவிரத்ன குழுவிற்கு சமர்ப்பித்து, 2025 வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும்.
இந்நாட்டில் உள்ள 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 ஒன்றிணைந்த பட்டப்படிப்பு நிறுவனங்களின் 14,600 கல்விசாரா ஊழியர்கள் 65 நாட்களாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் முழு உயர்கல்வித்துறையும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தை பொறுப்பேற்க இருக்கும் 250,000 இளைஞர்களின் வாழ்க்கை சீர்குலைத்து, அவர்களின் காலத்தை வீணடிப்பது தான் இதன் துயரமான பிரதிபலனாகும்.
2019இல் கோவிட் தொற்று, 2020இல் பொருளாதார நெருக்கடி, 2021இல் போராட்டம் என ஏற்பட்ட நிலைமைகளால் இந்த மாணவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.