உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் அதிர்ச்சி சம்பவம்… சுவிஸில் வசிக்கும் கணவனின் கண்முன்னே உயிரை விட்ட இளம் குடும்பப் பெண்!

யாழ்ப்பாண பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது கணவனின் கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கதீஸ்வரன் நிலாஜினி லகிதா என்ற 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணின் கணவர் சுவிஸில் வசித்து வருகின்ற நிலையில் அவருடன் கடந்த 24ஆம் திகதி வீடியோ அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்தவேளை இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கணவன் அயல் வீட்டவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து அயல் வீட்டார்கள் அவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.