Friday December 12, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Mullaitivu News இலங்கை செய்திகள்

வாற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்: பக்தர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை.

May 20, 2024 0 Comment
 வாற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்: பக்தர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று (20.05.2024) நடைபெறவுள்ள வைகாசி விசாகப் பொங்கலுக்கு ஆலயம் வரும் பக்தர்களிடமும் வியாபாரிகளிடமும் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் பலரும் இது தொடர்பில் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளமை நோக்கத்தக்கது.

கடந்த 2023 ஆம் வருட வைகாசிப் பொங்கல் நிகழ்வுக்கு வந்திருந்த மக்களின் சிந்திக்க மறந்த செயற்பாடுகள் மூலம் ஆலயச் சூழலில் தேங்கியிருந்த கழிவுகளின் காட்சிகளை அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் சுட்டிக்காட்டியிருந்தனர்.அந்த புகைப்படங்களே இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆலயச் சூழலில் வீசப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக அடுத்த நாளில் பலர் பங்கெடுத்து சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி ஆலயச் சூழலை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கும் வியாபார நிலையங்களுக்கும் குப்பைகளை எப்படி பேண வேண்டும் என்ற தெளிவூட்டல்கள் அவசியமாகும்.

உற்சவ கால ஏற்பாடுகளில் போது அதனை பிரதேச சபையும் ஆலய நிர்வாகமும் கவனத்தில் எடுத்திருக்கும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

எனினும் குப்பைகளை வீசும் நிலையில் இருப்பவர்கள் அதனை உரிய குப்பைக் கூடைகளில் போட்டு விடலாம். அல்லது அவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு பையில் போட்டு கட்டி அவரவர் இருக்கும் இடங்களுக்கு அருகில் வைத்துவிட்டால் அவற்றை அடுத்த நாளில் எடுத்தகற்றுவது இலகுவானதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

காற்றில் பரவிச் செல்லும் குப்பைகள் தொடர்பில் அதிக கவனமெடுத்து ஒவ்வொருவரும் வீச முற்படும் கழிவுகளை மீளவும் பெற்றுக்கொள்ளும் வகையில் பையிலிட்டுக் கட்டி வைப்பதே மேலானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் ஒரு பகுதியாக நந்திக்கடல் இருக்கிறது.

வைகாசிப் பொங்கலின் போது எழுந்தமானமாக வீசப்படும் பொலித்தீன் உள்ளிட்ட குப்பைகள் காற்றோடு எடுத்துச் சென்று நந்திக்கடலில் கலந்து விட்டால் நந்திக்கடல் பொலித்தீன் போன்ற இலகுவில் உக்கலடையாத பொருட்களால் மாசடைந்து கொண்டு செல்லும்.இது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்காது என்பதும் நோக்கத்தக்கது.

நந்திக் கடலின் மீன்வளம் இதனால் பாதிப்படைவதோடு நந்திக்கடலில் உள்ள பரந்த உயிர்ப்பல்வகைமையும் அழிவை நோக்கி விரைவாக கொண்டு செல்லப்பட்டு விடும்.

ஒரு நாளில் நடந்தேறும் வைகாசிப் பொங்கல் நிகழ்வில் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் சிந்தனையற்ற முறையிலான செயற்பாடுகளுக் கூடாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் நந்திக்கடல் சூழலை மாசாக்கிச் செல்வது நல்லதல்லவே!

ஆலய எல்லைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் மனதளவில் ஆலயச் சூழலை சுத்தமாக பேணுவதில் என்னாலான எல்லாவற்றையும் இயன்றளவில் செய்து கொள்வேன் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

அப்போதே நாம் நம்மைத் தயார் செய்து கொண்டு விடுவோம்.நாம் வாங்கிக் கொள்ளும் ஒவ்வொரு பொருட்களில் இருந்தும் அகற்றி வீசப்படும் பொருட்களை அருகில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளினுள் போட்டுச் செல்ல முற்பட முனைந்துவிடுவோம்.

ஒருங்கிணைந்த முறையில் செயற்பட முடிந்தால் ஆலயச் சூழலில் சேரும் குப்பைகள் சிதறிச் செல்வதை தடுப்பதோடு அவற்றை அகற்றுவோருக்கு இலகுவானதாகவும் ஆக்கிப் போகலாம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email