போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வீட்டிற்கு திரும்பிய தமிழக மாணவி அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை!
தமிழகத்தில் செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சி அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா தேவி(22).
இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகேயுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் கார்த்திகா தேவி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
தனது உறவினர்களிடம் சகஜமாக பேசிய அவர், அதிகாலை வேளையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் தகவல் அறிந்து வந்த பொலிசார், கார்த்திகா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் மாணவியின் செல்போனை கைப்பற்றிய பொலிசார் அதன்மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் திடீர் தற்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.