போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு கந்தையா நாகராஜா
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, தம்பதெனிய, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகராஜா அவர்கள் 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அன்னபூரணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற நளினி(லண்டன்) மற்றும் நந்தினி(இந்தியா), சாந்தினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விஜயகரன்(லண்டன்), அசோகன்(இந்தியா), சண்முகமணி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பூமணி, அரசரட்ணம், செல்வரட்ணம் மற்றும் கனகாம்பிகை(கனடா), ராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான முத்தையா, லட்சுமிபிள்ளை, கந்தையா, மகாதேவன், செல்லம்மா, சண்முகம், குமரையா, சிவஞானம், கந்தசாமி, மங்கயற்கரசி மற்றும் அன்னலட்சுமி(கனடா), பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கார்த்திகா, அனோசன், அஷ்யன்(லண்டன்) Dr. காவியா, அகல்யா(இந்தியா), மாதங்கி, அஷ்வின், அநிஷா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.