போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பில் பொலிசாருடன் ஹிருணிக்கா கடும் வாக்குவாதம்;
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை ஹிருணிக்கா பிறேமச்சந்திர உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அணியின் மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ளனர்.
இதில் பெண்கள் செம்மஞ்சள் நிற உடை மற்றும் செம்மஞ்சள் நிற பட்டி தலையில் அணிந்து, செம்மஞ்சள் நிற கொடிகளை ஏந்திய வண்ணம் பலர் கொண்டுள்ளார்.
பொலிஸார் குவிப்பு
இதேவேளை அப்பகுதியில் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை கொழும்பில் பொலிஸாரை போன்று உடையணிந்து வீதிநாடகம் மேற்கொண்ட இருவரை கறுவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹிணிக்கா உள்ளிட்ட குறித்த பெண்கள் குழுவினர் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தம்மையும் கைது செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.