போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த யாழ் கோப்பாய் பெண் !!!
யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கணைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 6 லீற்றர் கசிப்பையும் கோப்பாய் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது.உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த பெண் ஏற்கனவே பல தடவைகள் பொலிசாரால் கைது செய்துள்ளனர்.குறித்த பெண் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், இன்றைய தினம் (02-03-2023) கோப்பாய் பொலிஸார் 38 வயதுடைய குறித்த பெண்யை கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து, விற்பனைக்கு தயாராக இருந்த 6 லீற்றர் கசிப்பினையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.