போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொத்துரொட்டி வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் பிரபல அசைவ உணவகத்தில் வாங்கப்பட்ட கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி சேர்க்கப்பட்டமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைத்தது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. ஆசையாக சாபிபிட கொத்து வாங்கியவருக்கு அதில் பழுதடைந்த இறைச்சி சேர்க்கபப்ட்டிருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாலமுரளி தலைமையில் யாழ் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றைய தினம் (11) கடையில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன்போது மிகவும் பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் சுகாதார சீர்கேடான முறையில் சமைத்த சமைக்காத கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என சுமார் 45 கிலோ இறைச்சி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இன்று (12) பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசனால் மேலதிக நீதவான் நீதிமன்றில் “B” பத்திரத்தினூடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரித்த நீதவான் கடையினை மறு அறிவித்தல் வரை மூடி சீல்வைக்குமாறும், கைப்பற்றப்பட்ட 45kg இறைச்சியினை அழிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகரிற்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட 45kg இறைச்சியும் பொது சுகாதார பரிசோதகரால் அழிக்கப்பட்டது.