Tuesday March 10, 2026
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
உலகச் செய்திகள்

இனவழிப்பு மாநாடு… உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு!

March 19, 2024 0 Comment
 இனவழிப்பு மாநாடு… உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு!

குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையுடன் குர்திஸ்தான் தலைநகர் எர்பிலில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு (WTCC) விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அவ் அமைப்பின் பிரதிநிதி அதிதியுரை ஆற்றியுள்ளார்.

கடந்த 15.03.2024 வெள்ளிக்கிழமை எர்பில் மாநகரில் அமைந்திருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில், KONCICC அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இம் மாநாட்டில் பங்குபற்றிய வெளிநாட்டு அதிதிகளுக்கான பயண ஏற்பாடுகள், பாதுகாப்பு, தங்குமிடம், உபசரிப்பு ஆகியவற்றுக்கு ஈராக்கில் தனியான இராணுவக் கட்டமைப்பையும், அரச கட்டமைப்பையும் கொண்ட அதியுச்ச சுயாட்சி மாநில அரசாக விளங்கும் குர்திஸ்தான் மாநில அரசு அனுசரணை வழங்கியிருந்தது.

இனவழிப்பில் இருந்து உயிர்வாழ்வு வரை (From Genocide to Life) என்ற மகுடத்தின் கீழ் இடம்பெற்ற இம் மாநாட்டில் ஆசியுரையினை குர்திஸ்தான் மாநில அதிபர் நெச்சிர்வான் பார்சானி அவர்களின் மதியுரைஞர் கொறான் அவர்கள் ஆற்றினார்.

தொடர்ந்து குர்திஸ்தான், மொறக்கோ, கொரியா, லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இனவழிப்பிற்கு எதிரான அமைப்புக்களின் பிரதிநிதிகளோடு, தமிழீழத்தின் சார்ப்பில் பிரித்தானியாவில் இருந்து பங்கேற்ற உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக குழுவின் (WTCC) பிரதிநிதியான கலாநிதி A.R.சிறீஸ்கந்த ராஜா அதிதியுரை ஆற்றினார் (guest speaker).

இதன்போது குர்திஸ்தானிலும், தமிழீழத்திலும் நிகழ்ந்த இனப்படுகொலைகளை உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி ஒப்பிட்டுப் பேசியதோடு, ஏலவே நடந்தேறிய இனவழிப்புகளுக்கு நீதி தேடுவதோடு மட்டும் நின்றுவிடாது, இரு தேசங்களிலும் மீண்டும் இனவழிப்புகள் நிகழாதிருக்க வேண்டுமாயின், பன்னாட்டு உத்தரவாதத்துடன் கூடிய வலுவான பாதுகாப்புக் கட்டமைப்புகள் தமிழீழத்திலும், குர்திஸ்தானிலும் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

குர்திஸ்தான் தேசம் மீண்டெழுவதற்கு இனவழிப்பில் இருந்து உயிர்தப்பிய குர்திஸ் தலைவர்கள் வழிகாட்டியது போன்று, தமிழீழ தேசமும் மீண்டெழுவதற்கு முள்ளிவாய்க்காலில் இனவழிப்பில் இருந்து உயிர்தப்பிய மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்கள் வழிகாட்டியாக விளங்குவதாகவும் தனது உரையில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி தெரிவித்தார்.

மாநாட்டைத் தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி உட்பட அனைத்து வெளிநாட்டு அதிதிகளும் கடந்த காலங்களில் குர்திஸ்தானில் சதாம் உசேனின் படைகளால் இனவழிப்பு அரங்கேற்றப்பட்ட பகுதிகள், சித்திரவதைக் கூடங்கள், மனிதப் புதைகுழிகள், நினைவுத் தூபிகள், மடிந்த குர்திஸ் பொதுமக்கள் மற்றும் பெஷ்மேகா (Peshmerga) போராளிகளின் கல்லறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக சதாம் உசேனின் படைகளால் இரசாயனக் குண்டுகள் வீசிக் கொத்துக் கொத்தாக குர்திஸ் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்ட ஹலாப்ஜா பகுதியில் உள்ள கல்லறைகள் மற்றும் மனிதப் புதைகுழிகளில், மேற்குலக இராஜதந்திரிகள் மலர்வளையம் வைத்து இராணுவ மரியாதையுடன் வணக்கம் செலுத்திய 16.03.2024 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு அதே இடத்தில் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்த உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிதி உட்பட அனைத்து வெளிநாட்டு அதிதிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email