போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
4 பிள்ளைகளின் தந்தை உயிரை பறித்த முதலை!
அம்பாறை மாவட்டம் – காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் முதலை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (22-03-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 62 வயதான இராசாப்பு செளந்தராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இசம்பவம் தொடர்பில் தெரியவருவது,
காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பயின்றாற்றின் ஓரத்தில் சம்பவ தினத்தன்று கீரை வள்ளல் மற்றும் பொன்னாங்கண்ணி இலைக்கறி ஆகியவற்றை பறித்துக் கொண்டிருந்தபோது குடும்பஸ்தரை முதலை தாக்கியுள்ளது.
சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் இன்று மதியம் கையளிக்கப்பட்டுள்ளது.