போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பேருந்து லொறியுடன் மோதி விபத்து
பேருந்து ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்களான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இது தெற்கு அதிவேக வீதியில் மாத்தறை நோக்கி பயணித்த போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சுற்றுலாவுக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருந்துகஹஹெத்கெம மற்றும் பத்தேகம இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் எவ்வாறாயினும் விபத்து காரணமாக தடைப்பட்டிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.