போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சட்டவிரோதமான செயலில் ஈடுபட்ட நபர்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை
புத்தளம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டம் ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் இன்றைய தினம் (03-01-2023) நவகத்தேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கஞ்சாச் செடிகள் சட்டவிரோதமாக வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 10 அடி நீளமுடைய 6 கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நவகத்தேகம கொங்கடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரென பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.