போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் சிறுமி மீது பாலியல் சேட்டை செய்த 70 வயது தாத்தாவை நையப்புடைத்த இளைஞர்கள்!
யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 72 வயது முதியவர் பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மானிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் பலசரக்கு கடையொன்றை நடத்தி வரும் முதியவரே .பொருள் வாங்க சென்ற 10 வயது சிறுமியிடம் அத்துமீறியுள்ளார்.
கடையில் யாருமில்லாத சமயத்தில் தனியாக வந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நிலையில் சிறுமி கூக்குரலிட்டுள்ளார்.
அந்த பகுதியால் சென்ற இளைஞர்கள், சிறுமியின் அவலக்குரலை கேட்டு, கடைக்குள் சென்று முதியவரை அடித்து துவைத்து மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.