போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ்ப்பாணத்தில் திடீரென பணக்காரரான நபர்!
யாழ்ப்பாண மாவட்ட தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் கிளை முகவரில் ஒருவரான கனகலிங்கம் திலகவதி என்பர் மூலம், தேசிய லொத்தர் சீட்டினை பெற்றுக்கொண்ட கொக்குவிலை சேர்ந்த வி.சிவராஜ் என்பவருக்கான, 35 இலட்சம் ரூபா காசோலையினை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று (13-10-2022) யாழ். கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள லொத்தர் சபை முகவரின் கூடத்தில் கனகலிங்கம் திலகவதி தலைமையில் இடம்பெற்றது.
இவ் காசோலையினை வழங்கிவைப்பதற்காக தேசிய லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன நாரகல கலந்துகொண்டு வெற்றிபெற்ற பயனாளிக்கு வி.சிவராஜ்க்கு காசோலையினை கையளித்தார்.
இவ் நிகழ்வில் வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் ஐ.டி.பி.குமாரசிறி யாழ். மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி எம்.தவகோகுலன்,மற்றும் லொத்தர் சபையின் யாழ் மாவட்ட கிளை முகவர்கள், வாடிக்கையாளர்கள் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன நாரகல யாழ். மாவட்டத்தில் விஜயம் செய்ததுடன் காரைநகர், மாதகல், யாழ் மத்திய நகர், கோப்பாய், மருதங்கேணி ஆகிய பகுதிகளுக்கு சென்று கடந்த மாதங்களில் தமது லொத்தர் சபை முகவர்களின் மூலமாக எற்படுகின்ற குறைபாடுகள் அவர்களுக்கு தேவையான இடவசதிகள் தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.