போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு
வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்களை நாளை முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டணங்கள்
சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதுடன், முன்னுரிமை அடிப்படையிலான வாகன பதிவுக் கட்டணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஒருநாள் சேவையின் கீழ், வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், தாமதமாகி செலுத்தப்படும் வாகன பதிவுக் கட்டணங்கள் பல்வேறு கட்டங்களாக அதிகரிக்கப்படவுள்ளன.
அவ்வாறு தாமதக்கட்டணமாக மகிழுந்துக்கு நாளொன்றுக்கு 100 ரூபாவும், உந்துருளிக்கு 50 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.