முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு அதிரடியாக குறைப்பு
முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்த பின்னர் அவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு எண்ணிக்கை 51 ஆகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பு எண்ணக்கை 58ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பும் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.