போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி வுளோறி யசிந்தா அன்ரனிநாயகம் (கிரிஜா) – துயர செய்தி
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வுளோறி யசிந்தா அன்ரனிநாயகம் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை அல்பேட், அல்பேட் திரேசம்மா(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை மேரி திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனிநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,கமிலஸ்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,டள்சி அவர்களின் அன்பு மாமியாரும்,பற்றிமா ராணி(வனஜா), அன்ரனி வரதகுமாரன்(ஜெர்மனி), ஹென்றி ஜெயக்குமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பவளம், காலஞ்சென்ற யோசவ் மரியநாயகம் மற்றும் பரிமளம், தருளம், தயாளம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.