இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்களைப் பாராட்டிய ஆளுநர்!

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் (Anuradha Yahampath) விசேட பாராட்டுக்களை ஏற்பாடு செய்து பணப் பரிசில்களையும் வழங்கினார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் தமிழ்வண்ணன் துவரகேஷ் மற்றும் செங்கலடியைச் சேர்ந்த மாணவன் லோகிதன் கிஷோபன் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பௌதீகவியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் நான்காம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு மத்திய மகா வித்தியாலய மாணவனையும் பாராட்டினார்.
இதன்படி, நேற்று வியாழக்கிழமை (01-09-2022) காலை ஆளுநர் கல்வி கற்கும் பாடசாலைகளுக்குச் சென்று மாகாண சபையின் ஏற்பாட்டின் கீழ் குறித்த மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவை வழங்க ஏற்பாடு செய்தமை விசேட அம்சமாகும்.
மேலும், இந்த ஆண்டு அக்கல்லூரிகளில் உயர்தரத் தேர்வில் அதிக சித்திகளை பெற்ற மாணவர்களையும் பாராட்டினார்.
குறிப்பாக , இந் நிகழ்வில், ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.பிள்ளைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.