போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சதுரங்கப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்ட மாணவன்!
![சதுரங்கப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்ட மாணவன்!](http://itamilnews.com/wp-content/uploads/2022/06/119764.jpg)
மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலைய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் பிரகலதானன் ஜனுக்சன் (Brahalathanan Janukshan) வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
இப்போட்டிகள் ஆசிய சதுரங்க சம்மேளனத்தினால் June 17 – 22ஆம் திகதி வரை மாலைதீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
9 சுற்றுக்களைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு Draw உள்ளடங்கலாக 6 1/2 புள்ளிகளுடன்
இச்சுற்றுப் போட்டியில் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு, கஸகஸ்தான், கிர்கிஸ்ரான், உஷ்பெஸ்கிஸ்தான் நாட்டு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இச் சுற்றுப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த கௌத்தம் கிருஷ்ணா பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனுக்சன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.