போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஜனாதிபதி மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் இன்று அவசர சந்திப்பு!
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அவசர கட்சி தலைவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ளார். தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்த சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படும்பட்சத்தில் நாளை(19) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும், அது தொடர்பாக அமுலுக்கு வரும் சட்டங்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாக்கம் செலுத்தாது எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.