இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
திருமணத்தில் மணமகனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கறுப்புச் சந்தையில் சுமார் 2000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரை ஒரு லீற்றர் பெற்றோல் விற்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் புத்தளம் தில்லையடியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகனுக்கு உறவினர் ஒருவர் பெற்றோல் அன்பளிப்புச் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மணமகனுக்கு பெற்றோல் அன்பளிப்புச் செய்யப்பட்டமை சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.