போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நாட்டை வந்தடைய உள்ள எரிவாயு கப்பல்!
![நாட்டை வந்தடைய உள்ள எரிவாயு கப்பல்!](http://itamilnews.com/wp-content/uploads/2022/07/22-62c9113d2fce0.jpg)
இலங்கைக்கு 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று (9) நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி குறித்த எரிவாயுவை சந்தைக்கு வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிவாயு ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.