போதைப்பொருள் கடத்தல்… கலால் திணைக்கள ஊழியர், வங்கி முகாமையாளருக்கு நேர்ந்த கதி!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில் கலால் திணைக்களத்தில் பணிபுரியும் நபர் மற்றும் தனியார் வங்கியொன்றின் முகாமையாளர் என கூறப்படும் நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்களிடம் இருந்து ஹெராயின், கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (‘ஐஸ்’) போதைப்பொருள்கள், கஞ்சா, டிஜிட்டல் அளவுகோல் மற்றும் சுமார் ரூ.10,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கலால் திணைக்கள ஊழியர் மற்றும் தனியார் வங்கி முகாமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய போது அலவத்துகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த 08 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.