போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மனைவி குடும்பத் தகராறு காரணமாக எடுத்த விபரீத முடிவு
தாய் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத்தோடு தீயை அணைக்க சென்ற கணவனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று (24) இடம் பெற்றுள்ளதுதுடன் இத் தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் நான்கு பிள்ளைகளின் தாய் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பேருவளை சமட் மாவத்தையில் வசிக்கும் 28 மற்றும் 24 வயதுடைய திருமணமான தம்பதியருக்கே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காரணம்
இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக நேற்று மதியம் மனைவி தனது உடலில் பிளாஸ்டிக் கேனில் உள்ள மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.