போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
ஹட்டனில் இருக்கும் சிபெட்கோ எரிபொருள் நிலையத்தில் 4 நாட்களின் பின்னர் இன்றைய தினம் (03-11-2022) பெற்றோல் எரிபொருள் இறக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விடுவிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டிகள் உட்பட பெருமளவான வாகனங்கள் எரிபொருளைப் பெறுவதற்காக மீண்டும் வரிசையில் காத்திருந்தனர்.
பெற்றோல் எரிபொருளின் விலை குறைவதாக வெளியான செய்தியில், கடந்த சில நாட்களாக பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் பெற்றோல் எரிபொருளுக்கான முன்பதிவுகளை வழங்காததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அசோகரியத்தை சந்தித்தது இதை தொடர்ந்து இன்று பெற்றோல் வழங்கப்படுவதை அறிந்த பொதுமக்கள் பெற்றோல் நிலையத்திற்கு முன் குவிந்தனர்.