யாழில் அதிர்ச்சி சம்பவம்: விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் மதியம் (17-11-2023) குப்பிளான் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 31 வயதான கந்தசாமி தர்ஷன் என்ற இளைஞரே தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.