உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
முச்சக்கரவண்டியை திருடிய நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில், ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், சந்தேகநபர் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 28 வயதுடைய ஹூரீகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், மேலதிக விசாரணைகளில், கடந்த 24ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் பதிவான முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவம் தொடர்பில் இவர் சந்தேகநபராக உள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.