யாழ்ப்பாணம் சென்ற பேருந்தில் பொலிஸாருக்கு காத்திருந்த க்ஷாக்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பயண பையில் மறைத்து கசிப்பினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைதாகியுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 22 லிட்டர் கசிப்பினை நூதனமான முறையில் கடத்திச் சென்றுள்ளார்.
தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று (5) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.