தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணி – குவிக்கப்பட்ட அதிரடி படையினர்

நேற்று இரவு மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்ப நிலை, ஒரு கைதி வேறு சிறைக்கு மாற்றப்பட முயன்றபோது கிளம்பியதாக தெரியவந்துள்ளது. அப்போது சில கைதிகள் பூட்டுகளை உடைத்து வெளியே வந்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் குற்றவாளியான கைதி ஒருவரை மாற்றும் முயற்சி.அதையடுத்து பிற கைதிகள் குழுவாக பதற்றத்தை ஏற்படுத்தினர்.கருங்கற்கள் வீச்சு, பூட்டு உடைப்பு, மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீது எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்பட்டன.
நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, மோட்டார் சைக்கிள் பிரிவு, மற்றும் இராணுவத்தின் ஆதரவும் பெற்றுள்ளது.அருகிலுள்ள வீடுகளில் இருந்த மக்கள் துப்பாக்கிச் சத்தங்களை கேட்டதாகவும் கூறியுள்ளனர்.