போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
உலக பணக்காரரான முகேஷ் அம்பானி விட்டிற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியாவின் முக்கிய பிரபலங்களான முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், தர்மேந்திரா ஆகியோரின் வீடுகளை வெடி வைத்து தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாக மும்பையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பொலிஸாரிடம் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு உச்ச நீதிமன்றம் Z+ பாதுகாப்பை வழங்கிய ஒரு நாள் கழித்து, அம்பானியின் வீடு வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பப்படும் என்று மும்பை பொலிஸாருக்கு ஒரு பெரிய மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
இந்த அழைப்பு மும்பைக்கு அருகிலுள்ள பால்கரின் சிவாஜி நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பச்சன், தர்மேந்திரா, அம்பானி ஆகியோரின் பங்களாக்களை தகர்க்க 25 பேர் மும்பைக்கு வந்திருப்பதாக இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்டதை அழைப்பைப் பெற்ற பொலிஸார் அதிகாரி கேட்டார்.
இதையடுத்து மும்பை பொலிஸார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மிக உயர்ந்த Z+ பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இது வந்துள்ளது. இது மகாராஷ்டிரா அரசாங்கத்தால் உறுதி செய்யப்பட உள்ளது.
இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள அம்பானிகளுக்கு Z+ பாதுகாப்பு வழங்குவதற்கான முழு செலவுகள் அவர்களால் ஏற்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.