பிரான்சில் இருந்து இலங்கைக்கு வரவுள்ள கப்பல்
பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான சத்திரசிகிச்சை உபகரணங்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பிரான்ஸினால் வழங்கப்படவுள்ள மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளின் கையிருப்பு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அவசர சத்திரசிகிச்சை நிலையங்களின் செயற்பாட்டை 90 நாட்களுக்குள் பூர்த்தி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரான்ஸ் அரசாங்கம் 3 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான மருந்துகளை முன்னதாக வழங்கியிருந்தது.
மேலும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளுடன் இந்தியக் கப்பல் ஒன்று நாளை இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.