வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (16) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கைது இடம்பெற்றுள்ளது.
அம்பாறை, தெஹியத்தகண்டிய பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 389 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்னதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.