போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி கமலாம்பாள் கனகசபாபதிப்பிள்ளை
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பாள் கனகசபாபதிப்பிள்ளை அவர்கள் 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(முன்னாள் ரெஜிஷ்டார்) தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகசபாபதிப்பிள்ளை(தெரணியகல வர்த்தகர்) அவர்களின் மனைவியும்,கனகராஜன், கனகசபேசன், காலஞ்சென்ற கனகதாசன்(சந்திரன் மாஸ்டர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(மலேசியா), மகேந்திரன், நீலாம்பாள் மற்றும் மகேஸ்வரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா, சிவயோகம் ஆகியோரின் மைத்துனியும்,பத்மா, சித்திரா, ராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜகான், யசி – சுதாகர், அபிஷ்னா, ஆர்த்திகா, தர்மிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,ரீகன், அஷ்ரீன், எலேனா, றேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.