போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு சிவப்பிரகாசம் மகேந்திரராசன் (பெரியம்பி)
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் மகேந்திரராசன் அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(இலங்கை), இராசமணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற ஆறுமுகம்(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற மகிந்தன்(பிரான்ஸ்), மகிழன்(பிரான்ஸ்), மதுர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரதீபா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,சாய்ஷா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி(இலங்கை), குமுதா(இலங்கை) மற்றும் மகேஸ்வரி(பிரான்ஸ்), சாந்தினி(பிரான்ஸ்), அருட்செல்வி(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(லண்டன்), ரங்கநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சிவலிங்கம்(இலங்கை), சிவபாலன்(பிரான்ஸ்), உதயன்(பிரான்ஸ்), அருட்செல்வி(பிரான்ஸ்), உதயகுமார்(கனடா), மைதிலி(இலங்கை), சூரியகுமார்(இலங்கை) அருட்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நாகேஸ்வரன்(இலங்கை), சந்திரமலர்(பிரான்ஸ்), ஹவாசம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அண்ணனும்,
சுமதி(இலங்கை), சுரேந்திரன்(பிரான்ஸ்), லக்சுமி(பிரான்ஸ்), சுகந்தன்(பிரான்ஸ்), சுதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அத்தானும் ஆவார்.