போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், Markham கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளம் பரஞ்சோதி அவர்கள் 01-04-2023 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற டாக்டர். க. பரஞ்சோதி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நந்தகுமார்(கனடா), சகுந்தலா(ஐக்கிய அமெரிக்கா), செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை, அரசரத்தினம் மற்றும் தர்மபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமுதினி(கனடா), அமிர்தலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), வதனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராம், குகன், கீதா, செலினா, செவான் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.