போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகப்பன் கணபதிப்பிள்ளை அவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பன் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கமலம், சிவக்கொழுந்து, நடராஜா, சரஸ்வதி, பழனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜேந்திரன், பவீந்திரன், சுகபாணி, ஜெயபாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்வாணி, கோசலா, தினேஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வின், கவீனா, கிருஸ்ணா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிருஸ்ணபிள்ளை, கனகசபை, கௌரிதேவி, மனோகரன், சதானந்தன், காலஞ்சென்றவர்களான விசுவநாதன், மார்க்கண்டு மற்றும் கனகம்மா, காலஞ்சென்ற கதிரவேலு, மனோன்மணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.