போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம், சுவிஸ் St. Gallen ஆகிய இடங்களை வதிவிடமாகவும், முல்லைத்தீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஸ்ரீதரன் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகர், லவன், விஸ்ணு, மைதிலி, சஞ்ஜீ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுலக்ஷனா, பிரதீபா, கிருஷ்ணச்செல்வன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பமலர், மோகனகுமார் மற்றும் செளந்தரராஜா, மங்கையற்கரசி, விஜயலலிதா, கெளரிமலர், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயன், ஜினுசிகா, சயூசன், சாதனா, கபிசன், சுலோஜா, ஆதர்ஷ், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.