போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கைப் பெண் ஜனனி பற்றிப் புத்தகம் எழுதப் போகும் பிக்பாஸ் ஆண் பிரபலம்!
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியின் வின்னராக அசீம் தேர்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில், பிக்பாஸ் சீசன் 6 யின் கொண்டாட்ட நிகழ்ச்சியானது சமீபத்தில் இடம்பெற்றது.
ம.க.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா மிக சிறப்பாக தொகுத்து வழங்கிய பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக கேள்விகளை கேட்டு கலாய்த்து கொண்டனர்.
இவ்வாறான நிலையில், தனலட்சுமியிடம் நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களில் யாரைப்போல் இருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதட்கு அவர் அசீமைப் போல் இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் அமுதவாணனிடம் நீங்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் யாருடன் நடனமாட விரும்புகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் செரினுடன் என்று பதிலளித்தார்.
இந்த பதில் அவர் ஜனனி என்று கூறுவார் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் ஒரு பதிலடியாகவே இருந்தது. மேலும் ஜி.பி.முத்துவிடம் நீங்கள் பிக்பாஸ் முடிவடைந்த பின்னரும் யாருடன் பழக விரும்புகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் ஷாந்தி மாஸ்டர் என்று கூறியிருந்தார்.
அத்துடன், செரினிடம் பிக்பாஸ் சீசன் 6 இல் யார் உங்களுடன் சகோதரராக இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு ராம் என்று பதிலளித்தார்.
பிக்பாஸ் வீட்டில் காவியமாக இருப்பவர் யார் என்று ரக்ஷிதாவிடம் கேட்டதற்கு விக்ரமன் காவியமான ஒருவர் என்று கூறினார்.
பிக்பாஸ் வீட்டில் யாரை வைத்து ஒரு புத்தகம் எழுத விரும்புகிறீர்கள் என்று அசீமிடம் கேட்டதற்கு அவர் ஜனனி என யாரும் எதிர்பாக்காத ஒரு விடயத்தை கூறியிருந்தார்.
பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையான ஜனனியை பற்றி உலகவாழ் மக்கள் அனைவருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
டைட்டில் வின்னரான அசீம் அவரைப்பற்றி புத்தகமாக எழுத விரும்புவதாக கூறப்படுகின்றது. புத்தகத்தின் டைட்டில்லாக ஈழம் முதல் கோடம்பாக்கம் வரை என்றும் கூறியுள்ளார்.