போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து…மூவருக்கு நேர்ந்த நிலை!
ராகம பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் லொறி ஒன்று ரயிலுடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (01-04-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் ரயில் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் அருகில் இருந்த மரக்கறி விற்பனை நிலையம் பலத்த சேதமடைந்ததுடன் அதன் உரிமையாளர் அதனை பூட்டி விட்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கொலன்னாவையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தில் ரயில் இயந்திரம் சேதமடைந்துள்ளதாகவும், லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.