போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இளம் பெண் மரணம்
அத்துருகிரிய கொழும்பு பிரதான வீதியின் போரே சந்தி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் 22 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவ் இளம்பெண், கெப் மற்றும் காரில் மோதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம, ஹபரகட, போதிராஜா மாவத்தையில் வசிக்கும் சசினி யசோதா, தனியார் வங்கி ஒன்றில் தொலைபேசி இயக்குனராக பணிபுரிந்து வருகின்றார்.
3 வருடங்களுக்கு முன்னர் சசினி வாங்கிய மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
வீட்டில் இருந்து மாலம்பே நோக்கி சென்று கொண்டிருந்த போது, கோவின்ன மாவத்தையில் இருந்து அத்துரிகிரிய போர சந்திக்கு அருகில் பிரதான வீதிக்கு சென்று கொண்டிருந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.