போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
உலக ஹிந்தி மொழி தினத்தின் போது யாழில் இடம்பெற்ற நிகழ்வுகள்!
யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வுகள் இன்றைய தினம் (10-01-2023) காலை யாழில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றன.
இதன்போது ஹிந்தி மொழிக் கற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
மேலும் ஹிந்தி மொழி சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
யாழ். இந்திய துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.