போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கலால் சட்ட விதி ; மதுபான உரிமங்களை வழங்க இடைக்கால தடையுத்தரவு
கலால் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் நேற்று (02) பிறப்பித்துள்ளது.
இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கம் உட்பட பல தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட 03 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மே மாதம் 10 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, சட்டத்திற்கு முரணான வகையில் முறைசாரா முறையில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
சில உரிமங்களை வழங்கும் போது கலால் வரி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தேவைகள் கூட மீறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, கலால் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை தடைசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்வைக்கப்பட்ட அனைத்துப் சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.