போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 9 சந்தேக நபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
நாட்டிற்குள் தரமற்ற மருந்து இறக்குமதி குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு நேற்றையதினம் (22-04-2024) மீண்டும் அழைக்கப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கை இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.