போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இலங்கை இளைஞர்கள்
ஜோர்தானில் வீசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் வீசா காலாவதியாகியுள்ள போதிலும், அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறப்படுகின்றது.
உரிய நிறுவனம் தமது சம்பளத்தை வழங்காமல் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் தாம் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளதாக தெரிகின்றது.
மேலும் அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் பலர், இது தொடர்பில் இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.