போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நெடுந்தீவு கொடூர கொலை சம்பவம்: சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டியும் உயிரிழப்பு
யாழ் நெடுந்தீவில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில்100 வயது மூதாட்டியான பூரணம் என்பவர் இன்றைய தினம் (27-04-2023) வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது கடந்த சனிக்கிழமை (22-04-2023) அதிகாலை நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர்.
100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், குறித்த தாக்குதலின் போது தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நாயும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.