போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பிள்ளை மூலம் திருட்டில் ஈடுபட்டிருந்த தாய் கைது
கொழும்பில் தமது பிள்ளை மூலம் பணம் மற்றும் கைப்பேசிகளை திருடும் மோசடியில் ஈடுபட்ட தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்களின் கைப்பேசிகள் மற்றும் பணம் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய அத் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பொது இடங்களில் தமது பிள்ளையை பயன்படுத்தி நீண்டகாலம் திருட்டில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது