போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
புத்தளத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!
புத்தளத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் உடப்பு பகுதியில் இன்றைய தினம் (14-11-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த 28 வயதான கணபதி கஜித் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
உடப்பு – பாரிபாடு கடற்கரையோரத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நால்வர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது, மின்னல் தாக்குதலுக்கு உள்ளான குறித்த நால்வரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த நபரின் சடலம் உடப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உடப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.