போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
புத்தளத்தை உலுக்கிய பயங்கர விபத்து… பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
புத்தளம் ஆனமடு பிரதான வீதியின் கல்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் கல்குளம் பகுதியில் இன்றையதினம் (22-03-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியும், புத்தளத்தில் இருந்து ஆனமடு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் பயணித்தப் பெண்ணொருவர் இடையில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் ஆனமடு வெம்புவெவ சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.