போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் பறிமுதல்
யாழ் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியிலுள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட 140 கிலோ எடையுள்ள வலையுடன், கடையின் உரிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
தீடீர் சுற்றிவளைப்பு நேற்றையதினம்(25.10.2023) குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்புடைய மேலதிக விசாரணைகளை கடற்றொழில் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.